Tuesday, November 22, 2011

பெண்ணே
நீ ஐம்பது கிலோ
உன் வெட்கங்கள் ஐநூறு கிலோ
உன் அழகு !....
நான் இறக்க முன் அளவிட்டு முடிந்தால்
நிச்சமாய் சொல்வேன்

Tuesday, November 15, 2011

முதன் முதலாய்

முதன் முதலாய்
கணக்குப் போடக் கற்றுக் கொண்டனர்
அரேபியர்
முதன் முதலாய்
ஆண் இதயத்தை கூறு போட
 கற்றுக் கொண்டவள் நீ

அவளிடம்

என் உச்சந்தலை தொடங்கி
உள்ளங் கால் வரை
அவள் தான் இருக்கிறாள்
இதயத்தை தவிர
அது  மட்டும் அவளிடம் இருக்கிறது

வரட்சியாள்

பருவம் மாறிடும் -அவள் பார்வையால்
எனக்கென்றும்  மாறிடாது கோடை
வாடைக் காற்று வசந்தம்
அவள் மூச்சுக் காற்று வெப்பம்
ஈர இதயம் வறண்டதால்
அதன் வெடிப்பினுள் புகுந்தவள்
மாறாது எரிந்து கொள்வாள்
மாரியிலும் எரித்துக் கொல்வாள்
அவள் பெண்ணல்ல
என் வரட்சியாள் ......

ஒரு யாத்திரை

தெருவோர வசந்தம்
மருவி வந்த காதலின்று
அருவியாகி........

கால் கடுக்க
கண்மணியாள் தெருவோரம்
தரவையாகி .......

வலி தாங்கும் காதலிது
வழியெல்லாம்  விழி வைத்து
தொடர்கிறது

இரவு பகல் தெரியாமல்
இளமை வாழ்வு புரியாமல்
கரைகிறது

அடி காலும்  அணிகள் தேய
பாதணியகம் இலாபத்தில்
குவிகிறது

கருவிழியால் கைப்பிடிக்க
யுகக் காதல் யாத்திரை
தொடர்கிறது

கண்ணாமூச்சி

நீ வானத்துள் ஒளிந்திட்டாய்
என கூறியதுண்டு
நான் நம்பியதில்லை
பௌர்ணமி பார்த்த பின் புரிகின்றது
நிலவுக்குள் நீயும்
உனக்குள் நிலவும்
ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி ஆடுவது !!!!

நிம்மதி

அன்று கட்டிலில் புரண்ட போதும்
நிம்மதி வரவில்லை
நீ என்னை ஏற்காததை எண்ணி
இன்று கல்லறையில்  கிடக்கின்றேன்
            நிம்மதியாய்
உனக்காய் இறந்ததை எண்ணி