Tuesday, November 15, 2011

ஒரு யாத்திரை

தெருவோர வசந்தம்
மருவி வந்த காதலின்று
அருவியாகி........

கால் கடுக்க
கண்மணியாள் தெருவோரம்
தரவையாகி .......

வலி தாங்கும் காதலிது
வழியெல்லாம்  விழி வைத்து
தொடர்கிறது

இரவு பகல் தெரியாமல்
இளமை வாழ்வு புரியாமல்
கரைகிறது

அடி காலும்  அணிகள் தேய
பாதணியகம் இலாபத்தில்
குவிகிறது

கருவிழியால் கைப்பிடிக்க
யுகக் காதல் யாத்திரை
தொடர்கிறது

No comments:

Post a Comment